தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை (ஜூலை 14) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஊரக மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்னணு சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் இருக்கின்றதா என சரிபார்க்கப்படுகிறது. இதற்காக குறிப்பிட்ட சில பகுதிகளில் மட்டும் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. இந்நிலையில் நாளை தூத்துக்குடி மாவட்டத்தில் ஊரக மின்கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் பழுதடைந்த மின்கம்பம் மற்றும் தொய்வான மின்பாதையை சரி செய்யும் பணி நடைபெற இருப்பதால் மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ,
Exams Daily Mobile App Download
அதாவது, தூத்துக்குடி சிவந்தா குளம் ரோடு, இந்திரா நகர், பாத்திமா நகர், தாமோதர் நகர், ஜார்ஜ் ரோடு, வண்ணார் 1, 2, 3,-வது தெருக்கள், பெருமாள் தெரு, சண்முகபுரம் பிராப்பர், சந்தியாகப்பர் கோவில் மற்றும் ரட்சண்யபுரம் சுற்றியுள்ள பகுதிகள், தெற்கு பீச் ரோடு, மாதா தோட்டம், ரோச் காலனி 1, 2, 3-வது தெருக்கள், தெற்கு எம்பரர் தெரு, மினி சகாயபுரம், முத்தம்மாள் காலனி, தனசேகரன் நகர், ஆதிபராசக்தி நகர், எட்டயபுரம் ஹவுசிங் போர்டு, ஆரோக்கியபுரம், அரசடி பனையூர். அ.குமாரபுரம். ஏ.எம். பட்டி, மேல மருதூர், புளிய மரத்து அரசடி மற்றும் கிழக்கு கடற்கரை சாலை பகுதிகள், தூத்துக்குடி மணிநகர், அண்னா நகர் 1 முதல் 10-வது தெரு, டூவிபுரம் 1 முதல் 10-வது தெரு, கே.வி.கே.நகர், போல் பேட்டை மேற்கு, பிரையன்ட்நகர் 1 முதல் 12-வதுதெரு, முனியசாமி நகர், மன்னர் ஐயர் காலனி, கதிர்வேல்நகர், ராஜீவ்நகர், நிகிலேசன் நகர், பால்பாண்டிநகர், அன்னை தெரசா நகர், முத்துகிருஷ்ணன் நகர், கோக்கூர், தபால் தந்தி காலனி ஆகிய பகுதிகளிலும் நாளை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு வனத்துறையில் 25,000 ரூபாய் வரை சம்பளம் – தகுதி & விண்ணப்பிக்கும் முறை இதோ!
மேலும், முத்தையாபரம் அருகே உள்ள ஜே.எஸ்.நகர், அம்பேத்கார் நகர், குமாரசாமி நகர், சுந்தர்நகர், பொன்னாண்டி நகர், வீரநாயக்கன்தட்டு, காலாங்கரை, அத்திமரப்பட்டி, பொட்டல்காடு, மதகிரி, ஒட்டநத்தம் அருகே உள்ள சண்முகபுரம், பாண்டியாபுரம், பாறைக்குட்டம், வடமலாபுரம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள பாஞ்சாலங்குறிச்சி, இந்திராநகர் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள், கொம்புக்காரநத்தம் அருகே உள்ள செட்டியூரணி, மேலத்தட்டப்பாறை, கீழத்தட்டாப்பாறை, உமரிகோட்டை, எஸ். கைலாசபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.