தமிழகத்தில் செப்.15ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதை தொடர்ந்து நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தடுப்பூசி செலுத்தாதவர்கள் பொது இடங்களுக்கு செல்ல தடை – அரசு அறிவிப்பு!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது என கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து கோயம்புத்தூரில் சில பகுதிகளில் நாளை பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திரையரங்குகளில் 100% பார்வையாளர்கள் அனுமதி? மாநில அரசின் முடிவு!
போத்தனுர் துணை மின் நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள நஞ்சுண்டாபுரம், வெள்ளலூர், கோணவாய்க்கால் பாளையம், ஸ்ரீராம் நகர், இந்திரா நகர், ஈஸ்வரன் நகர், அன்பு நகர், ஜே.ஜே. நகர், அண்ணா புரம் மற்றும் அவ்வை நகர் ஆகிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனை தொடர்ந்து நாளை காலை 9:00 மணி முதல் மாலை 3:00 மணி வர மின்தடை அமலில் இருக்கும் என அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.