தமிழகத்தில் செப்.23ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகளின் விபரம் – வெளியீடு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. எனவே நாளை தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து தருமபுரி மாவட்டம், கடத்தூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக நாளை மின்தடை செய்யப்படுவதாக கடத்தூர் இயக்கமும் பராமரிப்பு செயற்பொறியாளர் கூறியுள்ளார்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறப்பு – விரைவில் அறிவிப்பு!
கம்பைநல்லூா், பூமி சமுத்திரம், க.ஈச்சம்பாடி, சொா்ணம்பட்டி, மாவடிப்பட்டி, ஆல்ரப்பட்டி, மல்லசமுத்திரம், செங்குட்டை, சமத்துவபுரம், அக்ரஹாரம் முத்தம்பட்டி, மல்லமாபுரம் பள்ளம்பட்டி, பெரிச்சாகவுண்டம்பட்டி, வெண்னாம்பட்டி, பட்டகாப்பட்டி, பெரமாண்டபட்டி, கெலவள்ளி, கொங்கரபட்டி, கூடுதுறைப்பட்டி, பள்ளத்தூா், மரியம்பட்டி, கோணம்பட்டி, காடையாம்பட்டி, வகுரப்பம்பட்டி, பள்ளிப்பட்டி, இருமத்தூா் வடமங்கலம் கொண்ரம்பட்டி, திப்பம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
காவலர் உடல் தகுதித்தேர்வினை தவற விட்டோர் கவனத்திற்கு – மீண்டும் வாய்ப்பு!
அதனை தொடர்ந்து சேலம் மாவட்டம், ஓமலூா் கோட்டத்துக்கு உள்பட்ட தொப்பூா் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே வெள்ளாா், எருமப்பட்டி, குண்டுக்கல், ஜோடுகுளி, தளவாய்பட்டி, எலத்தூா் சென்னா ரெட்டியூா், கொண்ரெட்டியூா், மூக்கனூா்,தீவட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. எனவே காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.