தமிழகத்தில் புதன்கிழமை (அக்.20) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து வரும் 20ம் தேதி நாமக்கல்லில் மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின்புகார் மையம் அமைக்கப்பட்டு சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
பட்டாசு கடை உரிமையாளர்கள் கவனத்திற்கு – 30 விதிகளை பின்பற்றினால் மட்டுமே தடையில்லா சான்று!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இந்த மின்தடை குறித்த மின் அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடிக்க உதவியாக உள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து வரும் 20ம் தேதி நாமக்கல் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
ஆதார் விவரங்களை பாதுகாக்க எளிய வசதி அறிமுகம் – “மாஸ்க் ஆதார்” முழு விவரம்!
எனவே நாமக்கல் துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான நாமக்கல் நகரம், அய்யம்பாளையம், நல்லிபாளையம், உத்தமபாளையம், கொண்டிச்செட்டிப்பட்டி, வகுரம்பட்டி, வசந்தபுரம், வேப்பநத்தம், பெரியப்பட்டி, கொசவம்பட்டி, ரெட்டிப்பட்டி, தூசூா், முதலைப்பட்டி, போதுப்பட்டி, என் ஜி ஓ காலனி, வீசாணம், சின்ன முதலைப்பட்டி ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.