தமிழகத்தில் திங்கட்கிழமை (அக்.18) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் அக்டோபர் 18 ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை செய்யப்படும் பகுதிகளும் அறிவிக்கப்ட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்தந்த பகுதியை சேர்ந்த மின் ஊழியர்கள் மூலம் பணிகள் நடைபெறுகிறது. மின் பராமரிப்பு நேரங்களில் மின்கம்பங்களை சரி செய்யும் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின் தடை செய்யப்படுகிறது. அந்த நேரங்களில் பணிகள் நிறைவு பெரும் வரும் மின் பயனாளர்களுக்கு மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
தமிழக அரசு பணியாளர்களுக்கு 25% தீபாவளி போனஸ் – முக்கிய கோரிக்கை!
மின்தடை தேதியையும், நேரத்தையும் அந்த பகுதியின் செயற்பொறியாளர் மூலம் முன் அறிவிப்பு செய்யப்பட்டு மின்தடை செய்யப்படுகிறது. மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் மக்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் கிடைக்கிறது. மின் ஊழியர்கள் துணை மின் நிலையங்களில் மின் இணைப்புகளை சரி பார்த்து தேவையான மாற்றங்களை செய்கின்றனர்.
8, 11 ஆம் வகுப்புகளுக்கு அக்.21 முதல் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
மற்ற பகுதிகளை தொடர்ந்து சென்னையில் அக்டோபர் 18 ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளனர். அதனால் சந்தீப் ரோடு, சிங்காரவேலர் சாலை 1-வது மற்றும் 2-வது மெயின் ரோடு முழுவதும், சின்ன நீலாங்கரை குப்பம், சுகன்யா ரோடு, ஈ.சி.ஆர் ஒரு பகுதி மற்றும் நீலாங்கரை, அம்பேத்கர் நகர், மதுரை சாமி மடம், வாசுதேவன் தெரு, எல்லையம்மன் கோயில் தெரு, ஸ்டேட் பேங்க் காலனி ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.