தமிழகத்தில் நாளை (அக்.13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
மின்தடை:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் (மின்னகம்) அமைக்கப்பட்டு புகார்கள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழகத்தில் அக்.19ம் தேதி டாஸ்மாக் கடைகள் மூடல் – கலெக்டர் உத்தரவு!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை அறிவுறுத்துகிறது. இந்த மின்தடை குறித்த அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னர் முடிக்க உதவியாக உள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை கமுதி கோட்டை மேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் நடைபெற உள்ளது.
TNPSC குரூப் 2 தேர்வு, 1338 காலிப்பணியிடங்கள் – போலி சான்றிதழ் சமர்ப்பித்தவர்க்கு 3 ஆண்டுகள் தடை!
எனவே கோட்டைமேட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பசும்பொன், கமுதி நகா், கண்ணார்பட்டி, கோட்டைமேடு, தலவநாயக்கன்பட்டி, கீழராமநதி, மேலராமநதி, காவடிப்பட்டி, அபிராமம், பாா்த்திபனூா், உள்ளிட்ட பகுதிகளில் மின் பணியாளர்கள் நலன் கருதி அக்.13 இல் மின்தடை செய்யப்படும் என கமுதி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.