தமிழகத்தில் ஜூன் 29ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் நாளை (ஜூன் 29ம் தேதி) மின்தடை செய்யப்படும் பகுதிகளை உசிலம்பட்டி மின்வாரிய செயற்பொறியாளர் அறிவித்துள்ளார்.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் குறிப்பிட்ட மாதங்களுக்கு ஒரு முறை மின் கம்பங்கள் சரிபார்க்கப்பட்டு மின்சாதன உறுதி பாகங்கள் மாற்றப்படும். இதன் மூலம் பாதுகாப்பான மின்சாரம் கிடைப்பது உறுதி செய்யப்படுகிறது. தற்போது கடந்த சில தினங்களாக மின்தடை அதிகம் ஏற்பட்டு வருகிறது. முன்னறிப்புகள் ஏதும் இன்றி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது மின் நுகர்வோர் புகார் அளித்து வருகின்றனர்.
வாட்ஸ்அப் (WhatsApp) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு – புதிய அம்சங்கள்!
மின்வாரியம் சார்பில் மாவட்டம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து மதுரையில் கடந்த இரு தினங்களாக மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வந்தது. அதனால் மின் விநியோகம் தடை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து நாளை மதுரை உசிலம்பட்டி கோட்டத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதனால் மின்னாம்பட்டி, லிங்கப்பநாயக்கனூர், பாப்பாபட்டி, புதுக்கோட்டை, காமாட்சிபுரம், மொண்டிக்குண்டு, துரைசாமிபுரம், திம்மநத்தம், மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் ஜூன் 29 நாளை மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என உசிலம்பட்டி மின் வாரிய செயற்பொறியாளர் அழகு மணிமாறன் தெரிவித்துள்ளார்.