தமிழக மின்வாரிய சார்பில் வெளியான அறிவிப்பு – மின்தடை பகுதிகள்!

0
தமிழக மின்வாரிய சார்பில் வெளியான அறிவிப்பு - மின்தடை பகுதிகள்!
தமிழக மின்வாரிய சார்பில் வெளியான அறிவிப்பு - மின்தடை பகுதிகள்!
தமிழக மின்வாரிய சார்பில் வெளியான அறிவிப்பு – மின்தடை பகுதிகள்!

நாளை மின்பராமரிப்பு பணிகள் காரணமாக காங்கயம் உடுமலை போன்ற பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்தடை செய்ய இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது.

மின்தடை:

தமிழகத்தில் கடந்த 9 மாதங்களாக மின்பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்ததால், இந்த பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்க தமிழக முதல்வர் மின்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். இதனால் கடந்த ஜூன் 19ம் தேதி முதல் தமிழகத்தில் மின்பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. பகுதி வாரியாக பிரிக்கப்பட்டு பணிகள் நடந்து வருகிறது. இந்நிலையில் நாளை மின்தடை செய்யப்படும் பகுதிகளின் விவரங்களை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

75 சதவீத பள்ளி கட்டணம் மட்டுமே வசூலிக்க வேண்டும் – புதுச்சேரி அரசு உத்தரவு!!

அதன்படி, நாளை 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10மணிமுதல் மதியம் 1மணிவரை காங்கயம் கோட்டம் ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தசவநாயக்கன்பட்டி, மேட்டுப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடைபெற உள்ளது. இதனால், ராசாத்தாவலசு துணைமின் நிலையத்திற்குட்பட்ட மேட்டுப்பாளையம், ராசாத்தா வலசு, வெள்ளகோவில், தசவநாயக்கன்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, குருக்கத்தி, புதுப்பை, பாப்பனி, அஞ்சூர், கம்பளியம்பட்டி பகுதிகளில் மின்விநியோகம் இருக்காது.

வெள்ளகோவில் பகுதியில் நடேசன்நகர், ராஜீவ்நகர், கொங்குநகர், கரூர் ரோடு, கோவை ரோடு, குருக்கத்தி, சேரன்நகர், கே.பி.சி.நகர், காமராஜபுரம் பகுதிகள் மற்றும், தசவநாயக்கன்பட்டி துணை மின் நிலையத்திற்குட்பட்ட சிலம்பகவுண்டன்வலசு, வேலம்பாளையம், கம்பளியம் பட்டி, குறிச்சிவலசு, குமாரபாளையம், சாலைப்புதூர், முளையம்பூண்டி, சரவணகவுண்டன்வலசு, கும்பம்பாளையம், குறிச்சிவலசு, சேர்வகாரன்பாளையம் பகுதியில் மின்விநியோகம் இருக்காது.

மேலும், மேட்டுப்பாளையம் துணை மின்நிலையத்திற்குட்பட்ட அய்யம்பாளையம், பாப்பம்பாளையம், மங்கலப்பட்டி, மந்தபுரம், வேலப்பம்பாளையம், கோவில் பாளையம், அத்திபாளையம், கே.ஜி.புதூர், என்.ஜி.வலசு, வரக்காளிபாளையம், மேட்டுப்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என காங்கயம் மின்வாரிய செயற்பொறியாளர் கணேஷ் தெரிவித்துள்ளார்.

TN Job “FB  Group” Join Now

உடுமலை இந்திராநகர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை 25-ந்தேதி காலை 10மணிமுதல் மதியம் 1மணிவரை உடுமலை மின்நகர், இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாவூர், ஆவல்குட்டை, சேரன்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிட்டாபுரம், துங்காவி, ராமேகவுண்டன்புதூர், மெட்ராத்தி ஆகிய இடங்களில் மின்வினியோகம் இருக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Velaivaippu Seithigal 2021

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!