தமிழ்நாடு மின் வாரியத்தின் முக்கிய அறிவிப்பு வெளியீடு – ஜூன் 24 மின்தடை!
தமிழகத்தில் மின் வாரியம் சார்பில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகள் குறித்த முழு விவரத்தை தற்போது மின்வாரியம் வெளியிட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் வரும் நாட்களில் மின்தடை பிரச்சனைகளை தடுக்கும் வகையில் தொடர்ந்து 10 நாட்கள் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதாக அரசு அறிவித்தது. அந்த வகையில் நாளை (ஜூன் 24 துணை மின்நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக அவல்பூந்துறை பகுதியில் காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று மின் வாரியம் அறிவித்துள்ளது. அதன்படி அவல்பூந்துறை, செங்காட்டு வலசு, சோளிபாளையம், வெள்ளியம்பாளையம், புங்காட்டுவலசு, பாப்பாவலசு பகுதியில் நாளை மின் விநியோகம் நிறுத்தப்படும்.
தமிழகத்தில் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு – முதல்வர் விளக்கம்!
எழுமாத்தூர் துணை மின் நிலையம் பகுதியில் நாளை (ஜூன் 23) பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் நாளை காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை ஆனந்தம் பாளையம், காரியாகவுண்டன் வலசு, அய்யா கவுண்டம்பாளையம், பொய்யேரி, கூத்தம்பாளையம், வேப்பிலை, வடக்கு பொன்னம்பாளையம், தெற்கு பொன்னம்பாளையம், நெறிப்பாறை, சின்னவெத்திபாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
TN Job “FB Group” Join Now
கணபதிபாளையம் துணை மின் நிலைய பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (ஜூன் 24) காலை 9 மணி முதல் பகல் 1 மணி வரை பஞ்சலிங்கபுரம், ஆரியங்காடு, காட்டுப்பாளையம், கீரிக்கல்காடு, கணபதிபாளையம், ஆயிக்கவுண்டன்பாளையம், சாணார்பாளையம், வேலம்பாளையம், சின்னம்மாபுரம், நஞ்சப்ப கவுண்டன்புதூர் மற்றும் காங்கேயம்பாளையம் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின் வாரிய அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.