தமிழகத்தில் நாளை (பிப்.26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் தொடர்ந்து 4 நாட்கள் மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்புகள்:
தமிழ்நாட்டில் மின்சாரம் தங்குதடை இன்றி மக்களுக்கு கிடைக்க வேண்டும் என்கிற நோக்கில் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் மாநிலத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கும் நிலையில் முன்னரே மின்தடைக்கான அறிவிப்புகளை அந்தந்த மாவட்டங்கள் சார்பில் மக்களுக்கு அறிவித்து விடுவர்.
உக்ரைன் தலைநகர் கீவில் தொடரும் ரஷ்யாவின் ஆதிக்கம் – நிலைகுலைந்த மக்கள்! 2வது நாள் போர் தீவிரம்!
அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் துணை மின் நிலையத்தில் உயரழுத்த மின்கம்பி பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் பிப்ரவரி 24, 25, 26 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன், ரஷ்யா இடையே 2வது நாளாக தொடரும் போர் – 800 ரஷ்ய வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிப்பு!
இது குறித்து பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் பாலபூமி தெரிவித்த அறிக்கையில், பெரியகுளம் உபமின் நிலையம் கட்டுப்பாட்டில் உள்ள தாமரைக்குளம் மின் உயர் அழுத்த மின்பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் தண்டுபாளையம், ஜெ.ஆர்.ஆர் நகர், கம்பம் சாலை, பாரதி நகர், வடுகபட்டி, தாமரைக்குளம், மேல்மங்கலம்,அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று கூறப்பட்டு உள்ளது.