ஆகஸ்ட் 17 மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் சில பகுதிகளில் அட்டவணையின் அடிப்படையில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருவதனால் மின்தடை ஏற்படும். எனவே நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.
மின்தடை :
தமிழகத்தில் கடந்த 10 ஆண்டுகளில் மின்துறையில் பராமரிப்பு பணிகள் ஏதும் நடைபெறாத நிலையில் தற்போது பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது . இதன் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து இது போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெறும் காலங்களில் பொதுமக்கள் ஒத்துழைப்பு மிக அவசியமாக உள்ளது. எனவே பொதுமக்கள் அதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளும்படி நிர்வாகம் கூறியுள்ளது.
தமிழகத்தில் இலவச செல்போன், ஆவின் பால் விலை குறைப்பு? முதல்வர் கேள்வி!
நாளை வடக்கன்குளம் பெருங்குடி துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதன் காரணமாக வடக்கன்குளம் பெருங்குடி துணை மின் நிலையத்தில் இருந்து மின் விநியோகம் பெறும் குமாரபுரம், புதியம்புத்தூர், மதகநேரி, மாற நாடார் குடியிருப்பு, செம்பிகுளம், பிள்ளையார் குடியிருப்பு, யாக்கோபுரம், சுந்தரலிங்கபுரம் மற்றும் காற்றாலை பண்ணை போன்ற பகுதிகளுக்கு நாளை மின்தடை ஏற்படும் என காற்றாலை மின் பண்ணை குழு கூறியுள்ளது.
TN Job “FB Group” Join Now
மின் பராமரிப்பு பணிகள் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. எனவே பாதுகாப்பு கருதி காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் இணைப்பு துண்டிக்கப்படும் எனவும் பொதுமக்கள் தங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன் ஏற்பாடுகள் செய்து கொள்ளுமாறும் வடக்கன்குளம் காற்றாலை மின் பண்ணை குழும உதவி செயற்பொறியாளர் ஜான் பிரிட்டோ கூறியுள்ளார். எனவே மேற்குறிய பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட இருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.