தமிழகத்தில் ஏப்ரல் 5ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் காரணமாக ஏப்ரல் 5ம் தேதி மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின்தடை ஏற்படும் பகுதிகளை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் சாலை பராமரிப்பு பணிகள் நடைபெறும் போதும், ஏதேனும் இயற்கை சீற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளாலும் அவ்வப்போது மின் விபத்துகள் ஏற்படுகிறது. இதனை தடுக்க மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது.
நாட்டில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்? வேகமாக பரவும் எக்ஸ்இ வைரஸ்!
மின் பணியின் போது மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் மிஞ்ச பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர். இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர்.
மற்ற பகுதியை தொடர்ந்து ஏப்ரல் 5ம் தேதி சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்ற உள்ளது. அதனால் தேவகோட்டை டவுன், உதையாச்சி, உடப்பன்பட்டி, எழுவன்கோட்டை, கண்ணங்கோட்டை, காரை, கோட்டூர், வேப்பங்குளம், கல்லங்குடி, நானாகுடி, திருமணவயல், நாகாடி, அனுமந்தக்குடி, ஊரணி கோட்டை பனங்குளம், மாவிடுத்திக்கோட்டை, காயாவயல், புளியால், கண்டதேவி, ஆறாவயல், உஞ்சனை ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளால் காலை ஏப்ரல் 5ம் தேதி காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.