தமிழகத்தில் நாளை (டிச.13) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (13.12.2021) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விபரங்களை இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அனைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. மேலும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவு பெறும் வரை மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மின் பராமரிப்பு பணிகள் மூலம் மின் பயனாளர்களுக்கு பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. இந்த மின்தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிப்பு செய்கின்றனர்.
இந்தியாவில் அமலுக்கு வரும் முழு ஊரடங்கு? கூடுதல் கட்டுப்பாடுகளுக்கு மத்திய அரசு பரிந்துரை!
இதனை அறிந்து மக்கள் வேலைகளை திட்டமிடுகின்றனர். பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதன் மூலம் முன் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது. பணிகளின் போது மின் நிலையங்களில் மின் இணைப்பு கம்பிகள் வயர்கள் மாற்றப்படுகிறது மேலும் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் நடைபெற்று வருகிறது.
அனைத்து ஊழியர்களுக்கும் சம்பள உயர்வு – புத்தாண்டில் ஹாப்பி நியூஸ்!
மற்ற பகுதியை தொடர்ந்து நாளை (13.12.2021) சிவகங்கை மாவட்ட துணைக்கு மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் உள்ள இந்திரா நகா், இளையான்குடி சாலை, மானாமதுரை சாலை, நேரு கடை வீதி, நெல்மண்டி தெரு, பேருந்து நிலையம், மீன் கடை வீதி, போஸ் சாலை, தொண்டி சாலை ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தெரிவித்துள்ளது.