தமிழகத்தில் நவ.11ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் நவம்பர் 11ம் தேதி மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் அன்றைய தினம் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக மின் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின் தடை தேதியை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர்.
EPFO வங்கி விவரங்களை ஆன்லைனில் புதுப்பிக்கும் வழிமுறைகள் – PF கணக்கு வைத்திருப்பவர்கள் கவனத்திற்கு!
இந்த நிலையில் தற்போது தமிழகத்தில் கனமழை பெய்து வருவதால் மின்கம்பங்கள் சேதமடைந்து வருகிறது. அதனால் மின் ஊழியர்கள் மின் விநியோகத்தை தடை செய்து சரி செய்து வருகின்றனர். மழை நீர் ஆங்காங்கே தேங்கி இருப்பதாலும் பலத்த காற்று வீசுவதாலும் மின் கசிவு ஏற்படா வண்ணம் பார்த்துக் கொள்ள மின்சாரத் துறைக்கு முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் வரும் வியாழக்கிழமை (11.11.2021) அன்று உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
CBSE 10, 12ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – அட்மிட் கார்டு பதிவிறக்கம் செய்வது எப்படி?
அதனால் அன்றைய தினம் கவரபோட்டை, பன்பாக்கம், ஆரணி, துரைநல்லூர், மேதூர், புலிகட், திருபள்ளிவனம், ஆவூர், மங்களம் ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் அறிவித்துள்ளது.