தேனி மாவட்டத்தில் மே 28ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மே 28ம் தேதி மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் அன்றைய தினம் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மேலும் மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல், மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெறும்.
அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு – அடுத்த மாதம் முதல் புதிய மாற்றம் அமல்!
அப்போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்படும். இது குறித்து அந்தந்த பகுதி மின் வாரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து மே 28ம் தேதி தேனி மாவட்டம் ஆண்டிபட்டி பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
Exams Daily Mobile App Download
அதனால் மதுரை – ஆண்டிபட்டி பிரதான சாலை, பேருந்து நிலைய பகுதிகள் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீனிவாசன் நகா், கொண்டமநாயக்கன்பட்டி, காமராஜா் நகா் ஆகிய பகுதிகளிலும் மே 28ம் தேதி சனிக்கிழமை அன்று காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று பெரியகுளம் கோட்ட செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.