தமிழகத்தில் நாளை (ஜூன் 7) மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மாம்பட்டி சுற்றியுள்ள கிராமப் பகுதியில் உப மின் மற்றும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி, மாதம் ஒரு முறை நடைபெறும். இந்த வகையில் தற்போதைய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்து மக்களுக்கும் தடையில்லா மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுத்து வருகிறார். அவ்வப்போது பெரும்பாலான இடங்களில் மின்னணு சாதனங்களில் கோளாறு, மின்னணு கசிவு ஏற்பட்டு பல இடங்களில் விபத்துகள் ஏற்படுகிறது. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசும் அதற்கு தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
தமிழக பள்ளிகளில் இன்று முதல் கோடை விடுமுறை ரத்து – கல்வித்துறை திடீர் உத்தரவு!
அதேபோல் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் வயர்கள், கம்பிகள் போன்றவைகள் சீர் செய்யப்பட்டு மின் பாதைகள் சரி செய்யப்படுகிறது. மேலும் மின் வயர்களின் குறுக்கே செல்லும் மரக்கிளைகளை வெட்டுதல் போன்ற பணிகள் பராமரிப்பின் போது நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணி மேற்கொள்ளும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பிற்காகவும் ஒரு சில மணி நேரம் மின்தடை செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
அந்தவகையில்,மாம்பட்டி, அனுமன்தீர்த்தம், கைலாயபுரம், காட்டேரி, சட்டையம்பட்டி, சந்திராபுரம், கொங்கவேம்பூர், கீழமொரப்பூர், பறையப்பட்டி, கே.வேட்ரப்பட்டி, தாமலேரிப்பட்டி, செல்லம்பட்டி, கணபதிப்பட்டி, செக்காம்பட்டி, கீழானூர், வேப்பம்பட்டி, தீர்த்தமலை, மேல்செங்கபாடி , டி. அம்மாபேட்டை, மாம்பாடி, நரிப்பள்ளி, பெரியப்பட்டி, கோட்டப்பட்டி, சிக்களூர், சிட்லிங், வேலனூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை ஜூன் 7ம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக செயர்பொறியாளர் எஸ்.பூங்கொடி தெரிவித்துள்ளார்.