தமிழகத்தில் நாளை (ஆக.29) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனையடுத்து அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்கின்றனர்.
நாடு முழுவதும் செப்டம்பர் மாதம் முதல் ரேஷன் பொருட்களுக்கு தடை? அரசு அறிவிப்பு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஆகஸ்ட் 29) மதுரை மாவட்டம் ஆரப்பாளையம் மற்றும் மீனாட்சி அம்மன் கோயில் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் சுடுதண்ணீர் வாய்க்கால் ரோடு, ராஜா மில் ரோடு, கனகவேல் காலனி, மணி நகர் மெயின் 2-வது தெரு, ஒர்க்ஷாப் ரோடு, பேச்சியம்மன் படித்துறை, வெங்கடசாமி அக்ரஹாரம், தமிழ் சங்கம் ரோடு, கிருஷ்ணராயர் தெப்பக்குளம், ஆதிமூலம், பெரியார் பஸ் நிலையம், மேல் வடம்போக்கி தெரு, ஹயாத்கான் சாலை, மேலவாசல் ஹவுஸிங் போர்டு, புது ஜெயில் ரோடு, கரிமேடு, மோதிலால் மெயின் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து மேலச்செட்டி, கீழச்செட்டி, மறவர்சாவடி, ஜடாமுனி கோவில் தெரு, தெற்கு ஆவணிமூல வீதி, கீழசித்திரை அம்மன் சன்னதி, சுவாமி சன்னதி, கிழக்கு ஆவணி மூலவீதி, மேலநாப்பாளையம், கீழநாப்பாளையம், கீழமாசி வீதி, தாசில்தார் பள்ளிவாசல் தெரு, தளவாய் தெரு, தொட்டியன் கிணற்றுசந்து, கீழமாரட் வீதி, சுங்கம் பள்ளிவாசல், ஆட்டு மந்தை பொட்டல், சோமசுந்தர அக்கரகாரம், திருமலை நாயக்கர் படித்துறை, தைக்கால் தெரு, வடக்கு வெளி வீதி. தெற்குச் சித்திரை வீதி, தெற்கு காவல் கூடதெரு மேல கோபுர வீதி, கீழமாரட் வீதி, மீனாட்சி கோவில் தெரு, அனுமார் கோவில் படித்துரை, வடக்கு மாசி வீதி, வக்கீல் புதுத்தெரு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி வரை மாலை 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்