தமிழகத்தில் நாளை (செப் 22) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் அடிக்கடி பல மாவட்டங்களில் மழை பெய்து வருவதால் மின்சார விபத்துகள் ஏற்படாமல் இருக்க மாதந்தோறும் குறிப்பிட்ட மின் நிலையங்களில் பராமரிப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாளை (செப். 22) மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரம் வெளியாகி இருக்கிறது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் கசிவுகளால் ஏற்படும் விபத்துகளில் இருந்து முன்னெச்சரிக்கையாக இருக்கலாம். மேலும் அங்கங்கே மின்தடை ஏற்படுவதாக புகார் வந்து கொண்டிருக்கும் நிலையில் அவ்வாறு ஏற்படாமல் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். இந்நிலையில் தமிழகத்தில் நாளை (செப் 22) மின்சார விநியோகம் நிறுத்தப்படும் பகுதிகளின் விவரங்கள் வெளியாகி இருக்கிறது.
அதன் படி சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை (செப் 22) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த பகுதியில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி மின்தடை ஏற்படும் என முன்கூட்டியே அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் துணை மின் நிலையத்தில் இருந்து மின் தடை செய்யப்படும் பகுதிகளின் விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் இந்த தேர்வு நடத்த இடைக்கால தடை – உயர்நீதிமன்றம் திடீர் உத்தரவு!
Exams Daily Mobile App Download
அந்த வகையில் திருப்பத்தூர், பிள்ளையார்பட்டி, திருக்கோஷ்டியூர், கருப்பூர், தென்கரை, மற்றும் மல்லாக்கோட்டை மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என திருப்பத்தூர் மின் பகிர்மான செயற்பொறியாளர் செல்லதுரை தெரிவித்துள்ளார். அதனால் அந்த பகுதி மக்கள் முன்னதாகவே தேவையான வசதிகளை செய்து வைக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்