தமிழகத்தில் நாளை (சனிக்கிழமை) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை தேர்வாய் கண்டிகை பகுதிகளில் உள்ள துணைமின் நிலையங்களில் மாதாந்திர பணிகள் நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை என மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்கம்பங்களில் கோளாறுகள் ஏற்பட்டு மின்னிணைப்பு துண்டிப்பு ஏற்படுகிறது. மேலும், அறியாதவிதமாக மின்கம்பங்களில் மின்கசிவும் ஏற்பட்டு விபத்துக்களும் ஏற்பட காரணமாக அமைகிறது. இதனிடையே, தீவிர கனமழையின் போதும் கூட மின்னிணைப்பு துண்டிப்பு ஏற்படாத வண்ணம் மின்சாரத்துறை சார்பாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இது மட்டுமல்லாமல், ஒவ்வொரு மாதமும் மின்கம்பங்களில் ஏதேனும் பழுது ஏற்பட்டுள்ளதா என சரிபார்க்கப்படுகிறது.
தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 6) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
இதற்காகவே, ஒரு நாள் முழுக்க மின்தடை அறிவிக்கப்பட்டு அனைத்து பழுதுகளும் சரிபார்க்கப்படுகிறது. இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த தேர்வாய் கண்டிகையில் உள்ள துணை மின்நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. இதனால், கும்மிடிப்பூண்டி பகுதியை சுற்றியுள்ள பகுதி முழுக்க நாளை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தில் மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் இதோ,
Exams Daily Mobile App Download
அதாவது, தேர்வாய் கண்டிகையில் உள்ள துணை மின்நிலையத்தில் பராமரிப்பு பணிகள் செய்வதால் தேர்வாய் கண்டிகை சிப்காட், தேர்வாய் கிராமம், கோபால்ரெட்டி கண்டிகை, குருவராஜகண்டிகை, பனஞ்சாலை, அமரம்பேடு, சிறுவாடா, கரடிபுத்தூர், கண்ணன்கோட்டை என்.எம்.கண்டிகை, பூவலம்பேடு, சின்னபுலியூர், தாணிப்பூண்டி, பூதூர் மற்றும் அதனைச்சுற்றி உள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரைக்கும் மின்விநியோகம் இருக்காது என தேர்வாய் கண்டிகை துணை மின்நிலைய இளநிலை பொறியாளர் லாவண்யா தெரிவித்துள்ளார்.