தமிழகத்தில் நாளை (ஜூலை 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
குளத்தூர் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் குளத்தூர் உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை என அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது பருவமழை காலம் என்பதால் அவ்வப்போது மின்வெட்டு ஏற்படுகிறது. மேலும், பலத்த காற்று வீசி மின்கம்பங்களில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மின்கசிவும் ஏற்பட்டு எதிர்பாராத விதமாக சில விபத்துகளும் ஏற்பட காரணமாகிவிடுகின்றன. மேலும், இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசின் சார்பில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதாவது, ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்தடை சாதனங்களில் ஏதேனும் கோளாறுகள் இருக்கிறதா என சரிபார்க்கப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், மின்கசிவு ஏற்படா வண்ணம் மின்னணு சாதனங்கள் அனைத்தும் முறையாக சரிபார்க்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல், மின்தடை செய்யப்படுவதற்கு முன்பாகவே அந்த பகுதியை சார்ந்த மக்களுக்கு தெரிவுபடுத்தப்படுகின்றன. அந்த வகையில் தற்போது குளத்தூர் துணை மின் நிலையத்தில் நாளை ( 12-07-22 ) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் குளத்தூர் பகுதியை சுற்றியுள்ள பகுதிகளுக்கு மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
TNUSRB PC தேர்வுக்கு விண்ணப்பிப்போருக்கு சிறந்த பயிற்சி வகுப்புகள் – முழு விவரம் இதோ!
மின்தடை அறிவிக்கப்பட்டுள்ள பகுதிகள் இதோ, குளத்தூர், இளையா வயல், நாஞ்சூர், பிரதகம்பாள்புரம், சத்தியமங்கலம், முத்துக்காடு, காவேரி நகர், திருமலைராயபுரம், உப்பிலியகுடி, தாயினிப்பட்டி, விளத்துப்பட்டி, ஒடுக்கூர், நார்த்தாமலை ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய செயற்பொறியாளர் முத்துக்கருப்பு தெரிவித்துள்ளார்.