தமிழகத்தில் நாளை (செப்.01) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
சென்னையில் நாளை (செப்டம்பர் 01) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தவறாது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் பயனர்களின் பாதுகாப்பிற்காகவும் மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்கின்றனர்.
பெண்களை அதிகம் பாதிக்கும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் – தடுப்பூசி கண்டுபிடிப்பு!
இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர். அதனால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை முன்கூட்டியே செய்து விடுகின்றனர். இந்த நிலையில் செப்டம்பர் 1ம் தேதி சென்னையில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை காலை கீழ்க்கண்ட பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தரமணி ஓ.எம்.ஆர் பகுதி, லட்சுமணன் நகர் ,பெருங்குடி, பாலவாக்கம் பகுதி ,ஹரிவர்த்தன் தெரு, சந்தோஷ் நகர் மெயின் ரோடு பகுதி, மற்றும் மேற்காணும் இடங்களில் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும். பிறகு பராமரிப்பு பணிகள் முடிந்த பிறகு சீராக மின் விநியோகம் இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்