செப்.21ம் தேதி மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை ( 21.09.2021) மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த பராமரிப்பு பணிகள் மூலம் மின் இணைப்புகளில் உள்ள குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு வருகிறது. மின் கம்பிகள் மாற்றுதல் வீதிகளில் செல்லும் மின் வயர்களை சரி செய்தல் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ளவைகளை கண்டறிந்து அகற்றுதல் போன்ற பணிகள் மாதந்தோறும் நடைபெற்று வருகிறது. இதற்காக குறிப்பிட்ட நேரம் மின்தடை செய்யப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மேலும் 2 பள்ளி மாணவர்களுக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!
இது குறித்து முன்னதாகவே அந்தந்த பகுதி மின்வாரிய செயற்பொறியாளர்கள் அறிவிப்பு விடுத்து வருகின்றனர். இதனால் மக்கள் மின் சார்ந்து உள்ள பணிகளை முன்னதாகவே செய்து முடிகின்றனர். தமிழகத்தில் நாளை விருதுநகர் மாவட்டம் சிவகாசி மற்றும் திருத்தங்கல் பகுதியில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பரப்பிரிப்பு பணிகள் காரணமாக அதனால் செங்கமல நாச்சியார் புரம் ஸ்டேட் பாங்க் காலனி, சாரா நகர், பூவநாதபுரம், தேவர்குளம், ஈஞ்சார், சுக்கிரவார்பட்டி, சாணார்பட்டி,நமஸ்கரித்தான் பட்டி ஆகிய இடங்களில் மின்தடை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் பயிற்றுநர் கலந்தாய்வு ஒத்திவைப்பு – பள்ளிக்கல்வித்துறை!
அதனை தொடர்ந்து சிவகாசி பகுதியில் விளாம்பட்டி, ஹவுசிங் போர்டு, ஊராம்பட்டி, பொட்டல்பட்டி , ராமசந்திராபுரம், சாட்சியாபுரம், தொழிற்பேட்டை, போலீஸ் காலனி, இ.பி. காலனி, சித்துராஜபுரம், அய்யப்பன் காலனி, சசி நகர், மாரனேரி, ஏ. துலுக்கபட்டி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.