தமிழகத்தில் அக்.21ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து அக்., 21ம் தேதி கருங்கல் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் மின்தடை ஏற்ப்படவுள்ள பகுதிகள் குறித்த விவரம் வெளியிடப்பட்டு உள்ளது.
மின்தடை:
கொரோனா காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. எனவே நாளுக்கு நாள் மின்தடை தொடர்பான புகார்கள் குவிந்த வண்ணம் இருந்தது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை என குற்றம் சாட்டினார்.
கோவாக்சின் தடுப்பூசி செலுத்திக் கொண்டோர் கவனத்திற்கு – WHO அக்.28ல் இறுதி முடிவு!
மேலும் தற்போது மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது எனவும் அவர் கூறினார். மற்ற பகுதிகளை தொடர்ந்து அக்., 21ம் தேதி கருங்கல் துணை மின் நிலைய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – தூய்மை பணிகள் தீவிரம்!
எனவே பாலூா், திப்பிரமலை, பூட்டேற்றி, தெருவுக்கடை, செந்தறை, மிடாலம், நட்டாலம், பள்ளியாடி, பாறைக்கடை, முள்ளங்கனாவிளை, செல்லங்கோணம் பகுதிகளில் மின் பராமரிப்பு பணியாளர்கள் நலனுக்காக காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என குழித்துறை மின்பகிர்மான அலுவலக செயற்பொறியாளர் கூறியுள்ளார். எனவே பொதுமக்கள் தேவையான முன்னேற்பாடு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.