தமிழகத்தில் வரும் ஜூலை 12 மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் வருகிற செவ்வாய்க்கிழமை (ஜூலை 12) அன்று நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகம் முழுவதும் அனைத்து துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற வேண்டியது அவசியமான ஒன்று. ஏனென்றால் மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் மின்கசிவு ஏற்பட்டு துணை மின் நிலையங்களில் விபத்துக்கள் நேரிடும். அவற்றை தவிர்ப்பதற்காக மாதம் ஒரு முறை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் ஒவ்வொரு இடங்களிலும் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் ஜூன் 12 வரை கனமழை வெளுத்து வாங்கும் – வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு!
இவ்வாறு மக்களின் அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை பராமரிப்பது மிக முக்கியம் என்பதால் இப்பணியின் போது சுற்று வட்டார பகுதிகளில் மின்தடை செய்யப்படும். அவ்விதமாக வருகிற செவ்வாய்க்கிழமை ஜூலை 12-ந்தேதி திருநெல்வேலி மாவட்ட நெல்லை கிராமப்புற மின் கோட்டத்துக்கு உட்பட்ட மானூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருக்கிறது. எனவே அங்கு இருந்து மின் வினியோகம் பெறும் மானூர், மாவடி, தெற்குபட்டி, களக்குடி, எட்டாங்குளம், கானார்பட்டி, பிள்ளையார்குளம், குறிச்சிகுளம் ஆகிய பகுதிகளுக்கு காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
அதே போல் ,வள்ளியூர் மின் கோட்டத்துக்கு உட்பட்ட களக்காடு மற்றும் பணகுடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள உள்ளது.
களக்காடு துணை மின் நிலையம்:
கோதைச்சேரி, சிங்கிகுளம், களக்காடு, காடுவெட்டி, வடமலைசமுத்திரம், கள்ளிகுளம், மீனவன்குளம், கருவேலன்குளம், கோவிலம்மாள்புரம் மற்றும் பக்கத்து கிராம பகுதிகள்.
பணகுடி துணை மின் நிலையம்:
பணகுடி, லெப்பை குடியிருப்பு, புஷ்பவனம், குமந்தான், காவல்கிணறு, சிவகாமிபுரம், தளவாய்புரம், பாம்பன்குளம், கலந்தப்பனை, கடம்பன்குளம் மற்றும் பக்கத்து கிராமங்களிலும் ஜூலை 12 அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படுகிறது.
Exams Daily Mobile App Download
மேலும், தென்காசி மின் கோட்டத்துக்கு உட்பட்ட மங்கம்மாள் சாலை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக தென்காசி புதிய பஸ் நிலையம், மங்கம்மாள் சாலை பகுதிகள், சக்தி நகர், காளிதாசன் நகர், ஹவுசிங் போர்டு காலனி, கீழப்புலியூர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் தடை செய்யப்படவுள்ளது என்ற மேற்குறிப்பிட்ட தகவல்களை மின்வினியோக செயற்பொறியாளர்கள் ஆகிய நெல்லை மாவட்ட அலெக்சாண்டர், வள்ளியூர் பகுதி வளன் அரசு மற்றும் தென்காசி பகுதி கற்பக விநாயக சுந்தரம் ஆகியோர் தெரிவித்து உள்ளனர்.