தமிழகத்தில் நாளை மறுநாள் (ஆக.30) மின்தடை ஏற்படவுள்ள இடங்கள் – மின்சார வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில், நிலக்கோட்டை பகுதியில் நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் இடங்கள் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது.
மின்தடை:
இந்தியாவில் மின்சாரம் என்பது அத்தியாவசிய தேவைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. ஏனென்றால் மின்சாரம் இல்லாமல் எந்த ஒரு வேலையும் நடைபெறாது. அதாவது வீடு முதல் பள்ளி, கல்லூரி, வேலைபார்க்கும் நிறுவனங்கள் என கணக்கிலடங்காத துறைகளுக்கு மின்சாரம் இன்றியமையாத தேவையாக உள்ளது. இவை எல்லாவற்றையும் விட விவசாயத்திற்கு மிகவும் முக்கியமானதாக மின்சாரம் உள்ளது. அதாவது மின் இணைப்பு மூலம் நீர் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தப்படுகிறது. எனவே இந்தியாவில் அனைத்து துறைகளுக்கும் மின்சாரம் முக்கியமான காரணியாகும்.
3 மடங்காக உயரப்போகும் வெப்பம் – ஆய்வில் அதிர்ச்சி தகவல் வெளியீடு!
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில மாதங்களாக மின் உற்பத்தி குறைந்து காணப்படுவதால் பல இடங்களில் அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. இதனால் மக்கள் மிகவும் சிரமப்படுவதாக தெரிவிக்கின்றனர். மேலும் இதனை சரிப்படுத்த மத்திய அரசு பல திட்டங்களை செயல்படுத்த உள்ளது. இதை தவிர மக்களும் மின்சாரத்தின் தேவைகளை அறிந்து அதனை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும் என்று அரசு அறிவுறுத்தி வருகிறது. இதை தவிர மின்சாரம் விநியோகம் செய்யப்படும் துணை மின் நிலையங்களை பராமரித்து சீரான மின்சாரம் வழங்குகிறது.
அந்த வகையில் நிலக்கோட்டை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நிலக்கோட்டை நகர், அப்பாபிள்ளைப்பட்டி, மணியக்காரன்பட்டி, என்.கோவில்பட்டி, கோடாங்கிநாயக்கன்பட்டி, சங்கால்பட்டி, சி.புதூர், சீத்தாபுரம், குளத்துப்பட்டி, விராலிப்பட்டி, சின்னமநாயக்கன்பட்டி, என்.ஊத்துப்பட்டி, வீலிநாயக்கன்பட்டி, மல்லனம்பட்டி, குரும்பப்பட்டி, வெங்கடாஸ்திரிகோட்டை, ஆகிய பகுதிகளில் நாளை மறுநாள் (ஆகஸ்ட் 30) காலை 9 மணி முதல் பிற்பகல் 2ம ணி வரை மின் விநியோகம் இருக்காது என வத்தலகுண்டு மின்வாரிய செயற்பொறியாளர் கருப்பையா தெரிவித்துள்ளார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்