தமிழகத்தில் செப்.30 இல் மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனை தொடர்ந்து பழனி துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் புதிதாக தலைமையேற்றுள்ள அரசு அனைத்து துறைகளிலும் பல்வேறு மாற்றங்களை புகுத்தியுள்ளது. மற்ற துறைகளை தொடர்ந்து மின்சார துறையில் அரசு முக்கிய சிறப்பம்சங்களை கொண்டு வந்துள்ளது. தமிழகத்தில் மின் தொடர்பான புகார்களை நிவர்த்தி செய்ய மின் புகார் மையம் அமைக்கப்பட்டு கோரிக்கைகள் சரி செய்யப்பட்டு வருகிறது. அதனை தொடர்ந்து தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
MSME ‘அவசர கடன் திட்டம்’ அடுத்த ஆண்டு மார்ச் 31 வரை நீட்டிப்பு – அரசு அறிவிப்பு!
அதன் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளை மின்தடை ஏற்பட்டு வருகிறது. இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இந்த மின்தடை குறித்த அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடிக்க உதவியாக உள்ளது. மற்ற பகுதிகளை தொடர்ந்து பழனி துணை மின் நிலையத்தில் வியாழக்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
IPL 2021: போட்டி அட்டவணையில் திடீர் மாற்றம்! T20 உலக கோப்பை தொடர் எதிரொலி!
எனவே பழனி துணை மின் நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான பழனி நகர், பாலசமுத்திரம், நெய்க்காரப்பட்டி, ஆயக்குடி மற்றும் சின்னக்கலையம் புத்தூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி நாளை காலை 9 மணி முதல் மாலை வரை குறிப்பிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும் பழனி மின்வாரிய உதவி செயற்பொறியாளர் கூறியுள்ளார்.