மதுரை மாவட்டத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் ஒரு சில இடங்களில் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்பட்டு வருகிறது. அதன்படி நாளை (ஆகஸ்ட் 6) மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதியில் மின்தடை ஏற்படும் என சமயநல்லூர் செயற்பொறியாளர் அறிவிப்பு வெளியிட்டு உள்ளார்.
மின்தடை:
தமிழகத்தில் கடந்த ஆட்சி காலத்தில் 9 மாதங்களாக மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெறவில்லை. மேலும் கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த பணிகள் மேற்கொள்ள கால தாமதம் ஏற்பட்டது. இதனால் பல இடங்களில் மின்சார கம்பங்கள் அறுந்து விழும் நிலையில் உள்ளதாக பல புகார்கள் எழுந்தன.
தமிழகத்தில் நல்லாசிரியர் விருது பெற வழிகாட்டு நெறிமுறைகள் – பள்ளிக் கல்வித்துறை வெளியீடு!
எனவே புதிதாக ஆட்சி பொறுப்பேற்ற முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் உத்தரவின் பேரில் பராமரிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டது. அதன்படி தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் தேதி வாரியாக மின்சார பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நாளை (ஆகஸ்ட் 6) மதுரை மாவட்டம் சோழவந்தான் பகுதி துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட தென்கரை மின்வழி பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
அதன்படி தென்கரை, ஊத்துக்குளி, முள்ளிப்பள்ளம், மண்ணாடிமங்கலம், அய்யப்பநாயக்கன்பட்டி, தாமோதரன்பட்டி, குருவித்துறை, சித்தாதிபுரம் ஆகிய பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என சமயநல்லுர் செயற்பொறியாளர் வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டு உள்ளது.