சிவகங்கையில் நாளை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாளை (29.09.2021) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. இதனால் குறிப்பிட்ட நேரம் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு மாவட்டங்களிளும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் ஊழியர்கள் மூலம் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் நிலையங்களில் உள்ள மின் சார்ந்த குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு மின் பயனர்களுக்கு பாதுகாப்பான தடையில்லா மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.
TNPSC தேர்வுக்கு விண்ணப்பிப்போர் கவனத்திற்கு – நேரடி நியமன பணிகளுக்கு வயது வரம்பு!
இந்த மின்தடை தொடர்பாக மின்வாரியம் முன்னதாக அப்பகுதி மக்களுக்கு அறிவித்து மக்களை எச்சரிக்கிறது. இந்த மின்தடை குறித்த மின் அறிவிப்பால் மின் பயனர்கள் மின் சார்ந்த வேலைகளை மின்தடைக்கு முன்னரே முடித்து விடுகின்றனர். மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (29.09.2021) சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் உள்ள துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது.
தமிழக அரசு மேல்நிலைப் பள்ளிகளில் தொழிற்கல்வி ஆசிரியர் பணியிடங்கள் – பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு!
அதனால் அப்பகுதியில் உள்ள காரைக்குடி நகர் பகுதிகள், பேயன்பட்டி, வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதிகள், செக்காலைக்கோட்டை, பாரி நகர், கல்லூரி சாலை, புதிய பேருந்து நிலையம், கல்லுக்கட்டி, பழைய பேருந்து நிலையம், கோவிலூர் சாலை, அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்ட மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.