தமிழகத்தில் நாளை (நவ.30) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை (நவ.30) சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூா் பகுதியில் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவுகளும் சில நேரங்களில் உண்டாகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் சாலைகளில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக இருக்கிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன. அத்துடன் மின் இணைப்பு கம்பிகளில் பிளவு ஏற்பட்டு சாலைகளில் ஏராளமான இடங்களில் விழுந்துள்ளன.
தமிழகத்தில் மீண்டும் ஊரடங்கு அமல்? ஒமிக்ரான் அச்சுறுத்தல்! தலைமை செயலர் ஆலோசனை!
அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துக்கள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழக அரசு பாதுகாப்பு நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மின் பராமரிப்பு பணிகளை தொடர்சசியாக மேற்கொண்டு வருகின்றன. இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக சிவகங்கை மாவட்டம் அமராவதிபுதூா் பகுதியில் நாளை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் புதிய கட்டுப்பாடுகள் அமல் – ‘ஒமிக்ரான்’ வகை கொரோனா அச்சம் எதிரொலி!
இதனை தொடர்ந்து காரைக்குடி அருகே அமராவதிபுதூா் துணை மின்நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான ஆறாவயல், தானாவயல், வேட்டைக்காரன்பட்டி, அரியக்குடி, விசாயலன்கோட்டை, எஸ்.ஆா். பட்டணம், கல்லுப்பட்டி, சாத்தம்பத்தி, ஊகம்பத்தி, மத்திய தொழிலக பாதுகாப்புப் படை வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறக் கிராமங்களில் நாளை காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று காரைக்குடி கோட்ட செயற்பொறியாளா் பி. ஜான்சன் அறிவித்துள்ளார்.