சிவகங்கை மாவட்டத்தில் நாளை(ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள சிவகங்கை மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 12) துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் அதனால் அந்தந்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவர்களின் அன்றாட வேலைகளை மின்தடை ஏற்படுவதற்கு முன்பே செய்து முடித்து விடுவார். மேலும் அந்த பராமரிப்பு பணிகள் ஏற்படுத்துவதற்கு ஒரு சில காரணங்கள் உள்ளன. அது என்னவென்றால், மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக சாலைகளிலும் வீடுகளிலும் ஏகப்பட்ட விபத்துக்கள் நடைபெறுகிறது. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. இவ்வாறு விபத்துகள் நடைபெறாமல் தடுப்பதற்காக தமிழக மின் வாரியம் சார்பில் இவ்வாறு பராமரிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் இன்று (ஏப்.11) முதல் மீண்டும் முழு ஊரடங்கு அமல் – பிரதமரின் திடீர் உத்தரவு!
இந்நிலையில் தற்போது சிவகங்கை மாவட்டம் மதகுபட்டி பகுதியில் உள்ள உயரழுத்த மின் பாதையில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை(ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், மதகுபட்டி, திருமலை, அழகமாநகரி, கீழபூங்குடி, வீரபட்டி, ஏரியூர், மேலமங்கலம், கிழமங்கலம்,பிரவலூர், பர்மாகாலனி, சிங்கினிபட்டி, தச்சம்பட்டி, ஆபத்தரன்பட்டி, அரளிக்கோட்டை, நாமனூர், ஒக்கூர், காடனேரி, அலவாக்கோட்டை ஆகிய இடங்களில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.