ராஜபாளையத்தில் நாளை (மார்ச் 15) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராஜபாளையம் பகுதிகளில் உள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தின் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள நிலையில் ராஜபாளையம் உள்ளிட்ட பல பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் ஒவ்வொரு மாதமும் மின்தடை அறிவிக்கப்பட்டு மின்னணு சாதனங்கள் அனைத்தும் சரிபார்க்கப்படுகிறது. அவ்வப்போது பெரும்பாலான இடங்களில் மின்னனு சாதனங்களில் கோளாறு, மின்னணு துண்டிப்பு ஆகியவை ஏற்படுகின்றன. இந்த மின்னணு துண்டிப்பினால் மின்கசிவு ஏற்பட்டு பல இடங்களில் விபத்துகள் ஏற்பட காரணமாக அமைந்துவிடுகிறது. இந்த மின் கசிவு மற்றும் மின் இணைப்பு துண்டிப்பை சரி செய்ய தமிழக அரசும் அதற்கான தகுந்த நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
CBSE 10 ஆம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு – தேர்வு முடிவுகள் குறித்த முக்கிய அறிவிப்பு!
அனைத்து பகுதிகளிலும் ஒரே நாளில் மின்தடை செய்யப்படுவது இல்லை. மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளும் முன்கூட்டியே மக்களுக்கு அறிவிக்கப்படுகிறது. இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் கோட்டத்தில் உள்ள தொட்டியபட்டி உப மின் நிலையத்தில் மாதாந்திர பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்சார வினியோகம் நிறுத்தப்படும் என தமிழ்நாடு மின்சார வாரிய குழு அறிவித்துள்ளது. எந்தெந்த பகுதிகளில் மின் வினியோகம் நிறுத்தப்படும் என்பதற்கான தகவல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
TNPSC குரூப் 4 VAO தேர்வில் 5000 காலிப்பணியிடங்கள் – புதிய பாடத்திட்டம்! முக்கிய அறிவிப்பு வெளியீடு!
புதுப்பட்டி, கோதை நாச்சியார்புரம், கொத்தங்குளம், தொட்டியபட்டி, முத்துலிங்காபுரம், அழகாபுரி, கலங்காபேரி, கலங்காபேரி புதூர், ராஜீவ்காந்தி நகர், இஎஸ்ஐ காலனி, வேட்டைபெருமாள் கோயில், விஷ்ணு நகர் உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் வினியோகம் நிறுத்தப்படும் என செயற்பொறியாளர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.