புதுக்கோட்டை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 5) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள புதுக்கோட்டை மாவட்டம் ஆதனக்கோட்டை பகுதியில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவித்து உள்ளனர்.
மின்தடை:
தமிழகத்தில் உள்ள அனைத்து துணை மின் நிலையங்களிலும் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறும் காரணத்தால் மாநிலத்தில் உள்ள எல்லா மாவட்டங்களிலும் பராமரிப்புப் பணிகள் முடியும்வரை மின் விநியோகம் தடை செய்து வைத்து இருக்கப்படும். மேலும் அந்தந்த இடங்களுக்கு முன்னரே மின்தடைக்கான அறிவிப்புகள் வெளியாகி விடும். மேலும் இது தவிர, துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி நடப்பதற்கான காரணங்கள், மின் கம்பங்களில் ஒரு சில நேரங்களில் ஏற்படும் மின்கசிவு மூலம் விபத்துகள் நடப்பதை தவிர்ப்பதற்காக பராமரிப்பு பணிகள் நடத்தப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு? அரசின் முடிவு என்ன!
இந்நிலையில் தற்போது புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆதனக்கோட்டை துணை மின் நிலையத்தில் நாளை (ஏப்ரல் 5) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் இதனை கந்தர்வகோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், ஆதனக்கோட்டை, மின்னாத்தூர், கணபதிபுரம், பெருங்களூர், தொண்டைமான் ஊரணி, வாராப்பூர், அண்டக்குளம், மணவிடுதி, சோத்துப்பாலை,சொக்கநாதபட்டி, மாந்தாங்குடி, காட்டு நாவல், மட்டயன்பட்டி, மங்களத்துபட்டி, கந்தர்வகோட்டை, அக்கச்சிப்பட்டி, வளவம்பட்டி ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்ய இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.