செப்.14ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு வெளியீடு!
பரமக்குடி மற்றும் குடுமியான் மலை ஆகிய பகுதிகளில் நாளை (14.09.2021) மின் பராமரிப்பு பணிகள் காரணமாக காலை 9 மணி முதல் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை :
தமிழகத்தில் மாதந்தோறும் மாவட்டம் வாரியாக உள்ள துணை மின் நிலையங்களில் மின் மூலம் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதன் மூலம் மின் பயனாளர்களுக்கு தடையில்லா பாதுகாப்பான மின்சாரம் உறுதி செய்யப்படுகிறது. மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளும் போது அந்தந்த பகுதி மின் வரியா செயற்பொறியாளர்கள் மூலம் முன்னறிவிப்பு செய்யப்பட்டு வருகிறது.
Reliance Jio Book விரைவில் அறிமுகம் – என்னென்ன வசதிகள்? எகிறும் எதிர்பார்ப்பு!
நாளை (14.09.201) பரமக்குடி அருகில் உள்ள மஞ்சூரில் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் காரணமாக மஞ்சூர், அரியனேந்தல், காமன்கோட்டை, நென்மேனி, செவ்வூர், மென்னந்தி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அப்பகுதியின் உதவி செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.
1 முதல் 8ம் வகுப்புகளுக்கு மீண்டும் பள்ளிகள் திறப்பு – மாநில அரசு உத்தரவு!
அதே போல அண்ணா பண்ணை துணை மின் நிலையத்தில் உள்ள வயலோகம், மாங்குடி, மண்ணவேளாம்பட்டி, அண்ணா பண்ணை, குடுமியான்மலை, பரம்பூர், புல்வயல், ஆரியூர், அகரப்பட்டி, பின்னங்குடி, விசலூர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.