திருநெல்வேலியில் நாளை (மார்ச் 26) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகளை மேற்கொள்வதற்காக மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து திருநெல்வேலியில் நாளை சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை (மார்ச்.26) மாவட்டத்தின் சில பகுதிகளில் மின்தடை ஏற்பட உள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக ஏராளமான விபத்துகள் ஏற்படுகிறது. அதனால் பல்வேறு உயிரிழப்புகளும் ஏற்படுகிறது. இந்த விபத்துகளை தவிர்க்க பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. இதில் குறிப்பாக மாதந்தோறும் மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளப்படுகிறது. அதனால் விபத்துகள் ஏற்படுவது குறைகிறது. ஆனால் இந்த பராமரிப்பு பணிகள் மாதந்தோறும் நடைபெறுகிறது. அதன் காரணமாக பல்வேறு பகுதிகளில் மின்தடை அறிவிக்கப்படுகிறது. மேலும் இதனை அரசு முறையாக அறிவித்து அதன்பின் செயல்படுத்துகிறது.
திருச்சியில் மார்ச் 27 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் – பட்டதாரி இளைஞர்கள் கவனத்திற்கு!
அதன்படி பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படுகிறது. இதனை தொடர்ந்து நாளை திருநெல்வேலியில் உள்ள சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் நாளை திருநெல்வேலியில் உள்ள பல்வேறு பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது. மேலும் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் விரைவில் மின் விநியோகம் செய்யப்படும் என்று கல்லிடைக்குறிச்சி கோட்ட செயற்பொறியாளர் எம்.சுடலையாடும் பெருமாள் என்று தெரிவித்துள்ளார்.
இதனை தொடர்ந்து சேரன்மகாதேவி, கரிசல்பட்டி துணை மின் நிலையத்தில் மின்சாரம் பெறும் பகுதிகளான கரிசல்பட்டி, பிள்ளைகுளம், காணியாளர் குடியிருப்பு, பட்டன்காடு, இடையன்குளம், கங்கணாங்குளம், சடையமான்குளம், வெங்கட்ரங்கபுரம், சிங்கிகுளம், தேவநல்லூர், காடுவெட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்தடை ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் இப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுக்கு தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.