தமிழகத்தில் நாளை (செப். 28) மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டம் திருப்பாலை மற்றும் உசிலம்பட்டி ஆகிய பகுதியில் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை (28.09.2021) மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை மதுரை மாவட்டம் திருப்பாலை மற்றும் உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் திருப்பாலை பிரதான சாலை, பாலாஜி நகர், ராஜன் நகர், விஷ்வசாந்தி, முனீஸ்வரன் நகர், இ.பி காலனி தாமிரபரணி, ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அக்.3 வரை வழிபாட்டு தலங்கள் மூடல், புதிய கட்டுப்பாடுகள் அமல் – மாவட்ட நிர்வாகம் உத்தரவு!
மேலும் திருப்பாலை பகுதிகளான ஜெ.என் நகர், பங்களா காலனி, கனகவேல் காலனி, ஆத்திகுளம், அங்கயற்கண்ணி காலனி, ஆகிய பகுதிகளிலும் காலை 10 முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும். அதனை தொடர்ந்து உசிலம்பட்டி அருகே உள்ள மொன்னிக்குண்டு சின்னகட்டளை பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் வாடிப்பட்டி, குளத்துபட்டி, வெள்ள மலைப்பட்டி, பாப்பாபட்டி கீரிப்பட்டி, வையம்பட்டி பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
TCS நிறுவனத்தில் பட்டதாரிகளுக்கு சூப்பர் வாய்ப்பு – தகுதி, நேரம், கற்றல் திறன் விளக்கம்!
அப்பகுதியில் உள்ள வகுரணி, அத்திப்பட்டி, வீரணம்பட்டி, பேரையூர், கேத்துவார்பட்டி, சாப்டூர், அணைக்கரப்பட்டி, அல்லிகுண்டம், லிங்கநல்லூர், துரைசாமி நகர், சேடபட்டி ஆகிய பகுதிகளிலும் அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் நாளை (28.09.2021) காலை 10 மணி முதல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளர் தெரிவித்துள்ளார்.