தமிழகத்தில் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மதுரை மாவட்டம் மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் மற்றும் உறங்கான் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்து உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் திமுக தலைமையிலான அரசு பதவியேற்ற நாள் முதல் அனைத்து துறைகளிலும் தனது கவனத்தை செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக மின்சார துறையில் அரசு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது. மாதந்தோறும் மின் கட்டணம் செலுத்த தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு வாக்குறுதி அளித்துள்ளது. விரைவில் இது நடைமுறைக்கு வரும் என்று மக்கள் எதிர்பார்த்து வருகின்றனர். மேலும் கடந்த மே, ஏப்ரல் மாதங்களில் விதிக்கப்பட்ட கொரோனா ஊரடங்கின் போது மக்களின் பொருளாதார சூழலை கருத்தில் கொண்டு அரசு மக்களுக்கு மின் கட்டணத்தை செலுத்த சலுகைகளை அறிவித்தது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு மகப்பேறு விடுப்பில் வீட்டு வாடகைப்படி – அரசாணை வெளியீடு!
அதனை தொடர்ந்து மாதந்தோறும் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை (24.09.2021) மேலூர் அருகே உள்ள தனியாமங்கலம் மற்றும் உறங்கான் பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் தனியாமங்கலம், பெருமாள்பட்டி சருகுவலயபட்டி, கீழையூர் ஆகிய பகுதிகளில் மின் விநியோகம் காலை 10 மணி முதல் மதியம் 2 மணிவரை தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக கோவில்களில் திருக்குறள் வகுப்பு – தமிழ் வளர்ச்சித் துறை திட்டம்!
மேலும் கீழவளவு முத்துசாமி பட்டி, இ.மலம்பட்டி, உறங்கான் பட்டி, கோட்டநத்தம்பட்டி, குறிச்சி பட்டி, தர்மதானபட்டி, ராஜாக்கூர், ஓடைப்பட்டி, இளமனூர், வரிச்சியூர், களிமங்கலம், செங்கோட்டை, தட்சனேந்தல், சக்குடி, சக்கிமங்கலம், குன்னுத்தூர், விளத்தூர், உறங்கான்பட்டி தொழிற்பேட்டை அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.