மதுரையில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

0
மதுரையில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் - மின்வாரியம் அறிவிப்பு!
மதுரையில் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!

தமிழகத்தில் தொடர்ந்து மாதாந்திர மின்பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது மதுரை மாவட்டத்தில் மின்பராமரிப்பு பணி காரணமாக மின்தடை ஏற்படும் பகுதிகளை மின்வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

ஜன.20 மின்தடை:

தமிழகத்தில் மின்விபத்துகளை தடுக்கும் விதமாகவும், தடையில்லா மின்சாரம் வழங்கும் விதமாகவும் தொடர்ந்து மின்பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. அவ்வாறு பணிகள் நடைபெறும் நேரங்களில் மட்டும் குறிப்பிட்ட மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும். இந்த மின்தடை காரணமாக பொதுமக்கள் பாதிக்காத வகையில் மின்தடை அறிவிப்பு முன்கூட்டியே சமூக வலைத்தளங்கள் அல்லது செய்தித்தொகுப்பு வாயிலாக மின்வாரிய செயற்பொறியாளர் மூலம் வெளியிடப்படும்.

இந்திய கிரிக்கெட் டெஸ்ட் கேப்டனுக்கு 2 வீரர்கள் பரிந்துரை – திலிப் வெங்சர்க்கார் கருத்து! ரசிகர்கள் விமர்சனம்!

அந்த வகையில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் மின்பகிர்மான கழகம் பசுமலை உபமின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் மதுரை மாநகரில் ஒரு சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் என்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி பைக்காரா, அழகுசுந்தர் நகர், புதுக்குளம், முத்துப்பட்டி, பெராக்கா நகர், திருநகர் ஒரு பகுதி, பாண்டியன் நகர், பாலசுப்பிரமணியன் நகர், ஹார்விபட்டி ஒரு பகுதி, தேவி நகர், பசுமலை, முனியாண்டி புரம், விளாச்சேரி, PRC காலனி, MMW காலனி, பாலாஜி நகர் உள்ளிட்ட பகுதிகளில் வரும் ஜன.20ம் தேதி மின்தடை ஏற்படும்.

தமிழகத்தில் டாஸ்மாக் மதுபான கடைகள் மீண்டும் மூடல் – அரசு அதிரடி உத்தரவு!

மேலும் அழகப்பன் நகர் ஒரு பகுதி, திருவள்ளுவர் நகர், நேரு நகர், VKP நகர், மருதுபாண்டியன் நகர், துரைசாமி நகர், ஜெய் நகர், பொன்மேனி, ராம் நகர், பைபாஸ் நகர் ரோடு ஒரு பகுதி, அன்பு நகர், மாடக்குளம் ஒரு பகுதி, வேல்முருகன் நகர், வானமாமலை நகர் மற்றும் அபர்ணா டவர் ஆகிய பகுதிகளிலும் மின்தடை ஏற்படும். அதனை தொடர்ந்து பெருங்குடி, பிரேம் நகர், பழங்குடியினர் குடியிருப்பு, சிவசக்தி நகர், விமான நிலையம் 4 Pole DP வரை, ஜெயந்தி புறம் Feeders Area, ராஜம் ரோடு, மீனாட்சி ரோடு, பண்டபீஸ் காலனி, ஜெயந்திபுரம் மார்க்கெட் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் வரும் ஜன.20 ம் தேதி வியாழக்கிழமை அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

Velaivaippu Seithigal 2022

To Subscribe => Youtube Channelகிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebookகிளக் செய்யவும்
To Join => Telegram Channelகிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!