மதுரையில் நாளை (ஏப்ரல் 7) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை(ஏப்ரல் 7) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை துணை மின் நிலையத்தில் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்கப்படும். தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு அல்லது மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
பொறியியல் படித்தவர்கள் கவனத்திற்கு- TNPSC CESE 2022 அறிவிப்பு வெளியீடு!
இந்நிலையில் மதுரை மாவட்டத்தில் நாளை(ஏப்ரல் 7) காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், வாடிப்பட்டி, அங்கப்பண்கோட்டம், சொக்கலிங்கபுரம், கச்சைக்கட்டி, குலசேகரன்கோட்டை, குட்லாடம்பட்டி, குட்டிக்கரடு, பெருமாள்பட்டி, பூச்சம்பட்டி, ராமையன்பட்டி, சாணாம்பட்டி, செம்மினிபட்டி, சமத்துவபுரம், விராலிபட்டி, சி.புதூர், வடுகபட்டி, கள்வேலிபட்டி, தனிச்சியம், ஆலங் கொட்டாரம், திருமால் நத்தம், கொண்டையம்பட்டி, நடுப்பட்டி, கீழக்கரை, மேட்டுநீரேத்தான், மேலசின்னம்பட்டி, கோவில்பட்டி, வடுகபட்டி, கட்டக்குளம் ஆகிய இடங்களிலும் மின்தடை ஏற்படும் என்று அறிவித்து உள்ளனர்.
அடுத்தாக, ராயபுரம், எல்லையூர், டி.மேட்டுப்பட்டி, கரடிக்கல், கெங்கமுத்தூர், நாராயண புரம், ராம கவுண்டன்பட்டி, செக்கானூரணி, கிண்ணிமங்கலம், மாவிலிபட்டி, கருமாத்தூர், சாக்கலிபட்டி, கோவிலாங்குளம், பூச்சம்பட்டி, ஜோதிமாணிக்கம், வடபழஞ்சி, தென்பழஞ்சி, பல்கலை நகர், புளியங்குளம், தென்பழஞ்சி, காக்கான் சாலை, கருமாத்தூர், சொரிக்காம்பட்டி, கோவிலாங்குளம், கண்ணனுார் ஆகிய இடங்களிலும் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று அறிவித்து உள்ளனர்.