மதுரை மாவட்டத்தில் நாளை (ஏப்ரல் 12) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள மதுரை மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஏப்ரல் 12) காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் தற்போது இருக்கும் நவீன டிஜிட்டல் உலகத்தில் ஒரு நொடி கூட மின்சாரம் இல்லாமல் மக்களால் இருக்க முடியாது. ஆனாலும் மின் தடை ஏற்படும் போது மக்கள் ஜெனரேட்டரை பயன்படுத்தி மின்சாரத்தை பெற்று வருகின்றனர். இது போல சென்னை போன்ற பெரு நகரங்களில் மின்தடை ஏற்படும் போது ஒரு நாளுக்கு முன்னரே மின் வாரியம் சார்பில் அறிவிக்க படும். தமிழ்நாட்டில் மின்சாரம் தடை படாமல் கிடைக்க வேண்டும் என்றால் மின் ஊழியர்கள் மூலமாக மாதந்தோறும் தொடர்ந்து இரண்டு மற்றும் மூன்று நாட்கள் அனைத்து மாவட்டங்களிலும் பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை ஏற்படும். இவ்வாறு பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது அந்தந்த துணை மின் நிலையங்களை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் மின் தடை ஏற்பட உள்ள பகுதிகளுக்கு முன்னரே அறிவிப்புகளும் சென்று விடும்.
தமிழகத்தில் ஏப்ரல் 13ம் தேதி இம்மாவட்டத்தில் உள்ளூர் விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில் தற்போது மதுரை மாவட்டத்தில் துணை மின் நிலையத்தில் நாளை(ஏப்ரல் 12)காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரை அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், சிட்டம்பட்டி, சௌராஷ்டிரா காலனி, பொருசுப்பட்டி, கத்தப்பட்டி, வெள்ளரிப்பட்டி, தெற்குத்தெரு, மாங்குளம், அயிலான்குடி, பட்டணம், லெட்சுமிபுரம், மாயாண்டிபட்டி, சிதம்பரம்பட்டி, அப்பன் திருப்பதி, பூசாரிப்பட்டி, ஜோதியாபட்டி, மாத்தூர், செட்டிகுளம், பூண்டி, நரசிங்கம்பட்டி, தெற்கு தெரு, அரிட்டாபட்டி, விநாயகபுரம், கல்லம்பட்டி, பெரியசூரக்குண்டு, மருதுார், வளச்சிகுளம், பூலாம்பட்டி, திருக்காணை, இலங்கிப்பட்டி, பனைகுளம், இந்திரா காலனி, சித்தாக்கூர், பெருமாள்பட்டி, அரும்பனூர், செங்குளம், மலையாண்டிபுரம், கொடிக்குளம், எம்.ஆர்.எம்., மில்.l உறங்கான்பட்டி, தொழிற்பேட்டை, வரிச்சியூர், களிமங்கலம், சக்குடி, செங்கோட்டை, தட்சனேந்தல், விளத்தூர், ஒடைப்பட்டி, ராஜாக்கூர், இளமனூர், சக்கிமங்கலம், கார்சேரி, குன்னத்துார் ஆகிய இடங்களில் மின்தடை ஏற்பட இருப்பதாக மின் வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.