தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு – ஜூன் 27 மின்தடை!
தமிழகத்தில் மதுரை மாவட்டத்தில் மின் பராமரிப்பு பணிகளுக்காக நாளை (27.06.2021) காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த இரண்டு வாரங்களாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் அறிவிக்கப்படாத மின்வெட்டு அடிக்கடி ஏற்படுகிறது. மின்சார உற்பத்தியில் பிரச்சனை இல்லை. ஆனால் மின்சாரத்தை கொண்டு செல்லும் மின் சாதனங்களில் குறைபாடுகள் உள்ளதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது. கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் எதுவும் நடைபெறவில்லை. அது தான் தற்போதைய மின் தடைக்கு காரணம் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகிறார்.
SBI வங்கி வாடிக்கையாளர்களுக்கு முக்கிய அறிவிப்பு – ஜூலை 1 முதல் கட்டணம் அதிகரிப்பு!
அதனால் கடந்த சில தினங்களாக மாவட்டம் தோறும் மின் பராமரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. அதனால் மின் விநியோகம் குறிப்பிட்ட நேரம் தடை செய்யப்பட்டு வருகிறது. வரும் 29ம் தேதி வரை இந்த மின் தடை அனைத்து பகுதிகளிலும் சில நேரம் ஏற்படும். பணிகள் முடிந்த பிறகு தடையில்லா மின் விநியோகம் செய்யப்படும் என தமிழ்நாடு மின்வாரியம் தெரிவித்துள்ளது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (27.06.2021) மதுரையில் சில பகுதிகளில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மதுரையில் சருகுவலையபட்டி, கீழவளவு, கொங்கம்பட்டி, செமினிபட்டி, மருதுார், பொய்கைகரைபட்டி, கள்ளந்திரி, மூனுார், அழகர்கோவில், செங்கோட்டை, நாட்டார்மங்கலம், உசிலம்பட்டி டி.புதுப்பட்டி, காங்கேயநத்தம், பொக்கம்பட்டி, தங்களாச்சேரி, பூசலப்புரம், சவுடார்பட்டி, கொண்டு ரெட்டிபட்டி, நக்கலக்கோட்டை, எஸ்.வலையபட்டி, நரசிங்காபுரம், கண்ணனுார், கலுங்குப்பட்டி, பன்னியான், கொக்குளம், நாகமலைபுரம், சொக்கநாதபுரம், அய்யம்பட்டி மதுரை அண்ணா நகர் 80 அடி ரோடு, கோல்சா சந்திப்பு, சுகுணா ஸ்டோர், எல்.ஐ.ஜி.காலனி, வைகை காலனி மேற்கு, கிழக்கு, தேவர் நகர் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.