கோவையின் முக்கிய பகுதிகளில் நாளை (டிச.18) மின்தடை – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக பல்வேறு பகுதியில் மின்தடை அறிவிக்கப்பட்டு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதன் காரணமாக கோவையின் முக்கிய பகுதிகளில் நாளை (டிச.18) மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் மின் கசிவு மற்றும் மின் கோளாறு காரணமாக பல்வேறு விபத்துக்கள் ஏற்படுகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் பிளவு காரணமாக விபத்துகள் ஏற்படுகிறது. ஆதலால் தமிழக அரசு இதனை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதில் குறிப்பாக மின் பராமரிப்பு பணிகளை முறையாக மாதந்தோறும் மேற்கொள்கிறது. இதனால் மின் விபத்துகள் எண்ணிக்கை குறைகிறது. அதனால் மின் வாரியம் மாதந்தோறும் மின்தடையை அறிவித்து பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொண்டு வருகிறது
அரசு ஊழியர்களுக்கு புதிய உத்தரவு – மாநில அரசு நடவடிக்கை!
இதனை தொடர்ந்து கோவையில் சில பகுதிகளில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக நாளை (டிச.18) சனிக்கிழமை அன்று கோவையில் உள்ள இருகூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த துணை மின் நிலையத்தில் மின்சாரம் இருக்காது என்று தெரிவித்துள்ளது. மேலும் மின் பராமரிப்பு பணிகள் உடனடியாக முடிக்க வேண்டும் அதன் பின் மின் விநியோகிக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
PF சந்தாதாரர்கள் கவனத்திற்கு – EPF பலன்கள் நிறுத்தம்? முக்கிய அறிவிப்பு!
இதனை தொடர்ந்து இருகூர் துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான இருகூர் ஒட்டர் பாளையம், பள்ளபாளையம், கண்ணம்பாளையம், வெங்கடாபுரம், கோல்ட்வின்ஸ், ஒண்டிபுதூர், ராவத்தூர், சிந்தாமணிபுதூர், சின்னியம்பாளையம், தொட்டிபாளையம், அத்தப்பகவுண்டன் புதூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.