கன்னியாகுமரியில் நாளை (ஏப்ரல் 6) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை(ஏப்ரல் 6) நடைபெற இருப்பதால் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை அறிவிப்பு:
தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையத்தில் மாதந்தோறும் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும். மேலும் இந்த மின்தடைகள் முதலில் 2 அல்லது 3 நாட்கள் ஏற்படும். இந்த மின்தடை காலை 9 மணி முதல் 5 மணி வரை இருக்கும். தற்போது இந்த மின்தடை ஆனது ஒவ்வொரு குறிப்பிட்ட பகுதிகளுக்கும் மாதத்தில் ஒரு முறை செய்யப்பட்டு வருகிறது.
TNPSC துறைத்தேர்வுகள் அறிவிப்பு 2022 – உடனே பாருங்க!
இந்நிலையில் தற்போது கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குழித்துறை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் நாளை (ஏப்ரல் 6) காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை துணை மின் நிலையத்தை சுற்றியுள்ள பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள், ஆலுவிளை, மேல்புறம், மருதங்காடு, கோட்டவிளை, செம்மாங்காலை, இடைக்கோடு, மாலைக்கோடு, புலியூர் சாலை, மேல்பாலை, பனச்சமூடு, அருமனை, பளுகல், களியக்காவிளை, மடிசல், பாலவிளை, பெருந்தெரு, பழவார், குழித்துறை, இடைத்தெரு ஆகிய இடங்களை சுற்றியுள்ள பகுதிகளில் நாளை மின்தடை ஏற்பட இருப்பதாக மின்வாரியம் சார்பில் தெரிவிக்கப் பட்டுள்ளது.