தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்ட அறிவிப்பு – ஜூலை 16 மின்தடை பகுதிகள்!
சென்னையின் ஒரு சில பகுதிகளில் நாளை மின்வாரிய பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகம் முழுவதும் கடந்த மாதம் முதல் மின்வாரியத்தின் பராமரிப்பு பணிகள் தொடர்ந்து பகுதி வாரியாக நடைபெற்று வருகிறது. பழுதடைந்த மின் கம்பங்கள், சாய்ந்த மின் கம்பங்கள், மின் கம்ப தாங்கும் கம்பிகள், பழுதடைந்த மின் பெட்டிகள், பலவீனமான பீங்கான் இன்சுலேட்டர், துணை மின் நிலையங்கள், தாழ்வாக செல்லும் மின் கம்பிகள் மற்றும் மரக்கிளைகள் அகற்றம் போன்ற பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் 50% மாணவர்களுடன் திறப்பு – மாநில அரசு முடிவு!
முன்னதாக பகுதி வாரியாக மின்தடை செய்யப்படும் பகுதிகளின் பட்டியலை மின்வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தின் மற்ற மாவட்டங்களில் மின் பராமரிப்பு பணிகள் கடந்த மாதமே முடிவடைந்து விட்டது. சென்னையில் இந்த வாரம் முதல் ஒவ்வொரு பகுதியாக பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. மேலும், நேற்று இரவு முதல் கனமழை காரணமாக சென்னையின் பல இடங்களிலும் மின் தடை செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
இந்நிலையில் ஜூலை 16, நாளை வெள்ளிக்கிழமை சென்னை, நீலாங்கரை சன் ரைஸ் அவென்யூ அனைத்து தெரு, கபாலீஸ்வரா் நகா் வடக்கு மற்றும் தெற்கு, கபாலீஸ்வரா் நகா் பிரதான சாலை, கபாலீஸ்வரா் நகா் பீச் ரோடு ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த பகுதிகளில் மின்தடை செய்யப்பட இருப்பதாக மின்வாரியம் அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் முடிந்த பின்னர் மின் விநியோகம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.