தமிழகத்தில் நாளை (ஜூலை 11) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின் வாரியம் அறிவிப்பு!
திருப்பூர் மாவட்டத்தில் ஜூலை 11ம் தேதி கானூர் புதூர், பசூர் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் அத்துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது. தற்போது மின் தடை செய்யப்பட உள்ள பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் தடையில்லா மின்சாரத்தை வழங்கும் நோக்கில் மாதந்தோறும் துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இந்த பராமரிப்பு பணிகளின் போது சேதமடைந்த மின் கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இத்தகைய பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. இது குறித்து அப்பகுதி செயற்பொறியாளர்கள் மூலம் மின் பயனர்களுக்கு முன்னறிவிப்பும் செய்யப்பட்டு வருகிறது. இதனை அறிந்து மின் பயனர்கள் மின் உதவியுடன் செய்யப்படும் வேலைகளை முன்னதாகவே முடித்து விடுகின்றனர்.
தமிழகத்தில் எம்.பி.ஏ, எம்.சி.ஏ படிப்புகளுக்கு நாளை முதல் விண்ணப்பங்கள் வரவேற்பு – அரசு வெளியீடு!
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஜூலை 11) திருப்பூர் மாவட்டத்தில் கானூர் புதூர், பசூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. கானூர், அல்லப்பாளையம், கஞ்சப்பள்ளி, ராமநாதபுரம், செட்டிபுதூர், ஆலத்தூர், தொட்டிபாளையம், குமாரபாளையம், மொண்டிபாளையம், தாசராபாளையம், ஆம்போதி, பசூர் ஒரு பகுதி, பெத்தநாயக்கன்பாளையம், பூசாரிபாளையம், இடையர்பாளையம், செல்லனூர், ஆயிமாபுதூர், ஒட்டர்பாளையம், ஜீவாநகர், அன்னூர், மேட்டுப்பாளையம், மேட்டுக்காட்டுபுதூர், அம்மா செட்டிபுதூர், புதுப்பாளையம், பூலுவபாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
அதனை தொடர்ந்து தாராபுரம் மின் நிலையத்திலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. வடுகபட்டி, குமாரபாளையம், மூக்கு தரிச்சாம்பாளையம், சுள்ளிபெரிக்காம்பாளையம், செம்மங்கரை, வண்ணாபட்டி, பட்டுதுறை, வரப்பட்டி, நீலாங்காளிவலசு மற்றும் பி.ராமபட்டிணம் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை என்று மின் வாரியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.