தமிழகத்தில் நாளை (டிச.2) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிக்காக மின்தடை அறிவிக்கப்படுகிறது. அதன் காரணமாக நாளை (டிச.2) உடுமலை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் நிறுத்தப்படும் என்று மின்வாரியம் அறிவிப்பு விடுத்துள்ளது. அத்துடன் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என்று அறிவித்துள்ளது.
மின்தடை அறிவிப்பு
தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் சில மின் விபத்துகள் ஏற்படுகின்றன. இந்த விபத்துக்கு மின் கசிவு மற்றும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் கோளாறுகள் முக்கிய காரணமாகின்றன. மேலும் மின் இணைப்பு கம்பிகளில் ஏற்படும் மின் பிளவு காரணமாக பல்வேறு விபத்துகள் ஏற்படுகிறது. தற்போது பருவ மழைக்காலம் என்பதால் ஏராளமான இடங்களில் தொடர்ந்து மழை பெய்து கொண்டு வருகிறது. அதனால் சாலைகளில் ஏராளமான இடங்களில் நீர் நிரம்பி வெள்ளப்பெருக்காக காணப்படுகிறது. மேலும் சாலைகளில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்துள்ளன.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு ஜாக்பாட் அறிவிப்பு – ஊக்கத்தொகை வழங்க திட்டம்!
அதனால் இரவு நேரங்களில் ஏராளமான விபத்துகள் ஏற்படுகின்றன. ஆகவே தமிழக அரசு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஒவ்வொரு மாதமும் மின் பராமரிப்பு பணிகளை முறையாக மேற்கொள்கின்றன. இதற்காக ஒரு குறிப்பிட்ட நேரம் செலவிட்டு மின் பராமரிப்பு பணிகளை தொடர்சசியாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் அதிக விபத்துகள் ஏற்படுவது தடுக்கப்படுகிறது. அதனால் தமிழக அரசு மாதந்தோறும் மின் தடை அறிவிப்பை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறது. இதன் விளைவாக நாளை உடுமலை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் இருக்காது என மின்வாரியம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
டிச.10 வரை இரவு நேர ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமல் – மாநில அரசு உத்தரவு!
இதனால் உடுமலை துணை மின் நிலையத்தில் மின் விநியோகம் பெறும் பகுதிகளான வி.ஜி.ராவ் நகர், குறுஞ்சேரி, புக்குளம், பெதப்பம்பட்டி, சோமவாரபட்டி, ஆலமரத்தூா், போடிபட்டி, அண்ணா நகா், காமராஜ் நகா், பள்ளபாளையம், கொங்கலக்குறிச்சி, குறிச்சிக்கோட்டை, ராமசாமி நகா், ஜீவா நகா், சக்தி நகா், அரசு கலைக் கல்லூரி, வித்யாசாகா் கல்லூரி, கணபதிபாளையம், பொட்டயம்பாளையம், ராகல்பாவி பிரிவு போன்ற பகுதிகளில் நாளை மின்சாரம் இருக்காது என மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் தடை ஏற்படும் என்றும், மின் பராமரிப்பு பணிகள் முடிந்தவுடன் மின் விநியோகிக்கப்படும் என்று மின்வாரிய செயற்பொறியாளா் சி.சதீஷ்குமார் அறிவித்துள்ளார்.