தமிழகத்தில் நாளை (நவ.23) மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு – பொதுமக்கள் கவனத்திற்கு!
தருமபுரி மாவட்டம் தீர்த்தமலை ஆரூரை அடுத்த மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் நாளை மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களில் மாதந்தோறும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. இந்த மின் பராமரிப்பு பணிகளின் போது சாலைகளில் மின் விநியோகத்திற்கு தடையாக உள்ள மரக்கிளைகள் வெட்டப்பட்டு மின் பாதை சரி செய்யப்படுகிறது. மேலும் மின் கம்பங்களில் பழுதடைந்த மின் கருவிகள் மாற்றப்படுகிறது. மின் பராமரிப்பு பணியின் போது மின் ஊழியர்களின் பாதுகாப்பிற்காக பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் தடை செய்யப்பட்டு வருகிறது.
பள்ளிகளுக்கு மறுஉத்தரவு வரும் வரை விடுமுறை, ஆன்லைன் வழியில் வகுப்புகள் – கல்வித்துறை அறிவிப்பு!
இது குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்து வருகின்றனர். அதனால் மக்கள் மின்தடை தேதியை அறிந்து அதற்கேற்றது போல வேலைகளை செய்ய திட்டமிடுகின்றனர். அவ்வப்போது மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதன் மூலம் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் மின் கசிவு அதனால் ஏற்படும் மின் விபத்துகள் தடுக்கப்படுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (22.11.2021) தர்மபுரி மாவட்டம் தீர்த்தமலை ஆரூரை அடுத்த மாம்பட்டி துணை மின் நிலையத்தில் மின் பார்ப்பரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. அதனால் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை கீழ்க்கண்ட பகுதிகளில் மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
சபரிமலை தரிசனம் செல்ல திட்டமிடுவோர் கவனத்திற்கு – இருவழிப்பாதையை திறக்க முடிவு!
மாம்பட்டி, அனுமன் தீர்த்தம், சடையம்பட்டி, காட்டேரி, சந்திராபுரம், கொங்கவேம்பு, மேல்செங்கப்பாடி, கீழ்மொரப்பூர், தீர்த்தமலை, பறையப்பட்டி, டி. அம்மாபேட்டை, சிக்களூர், பெரியப்பட்டி, கூத்தாடிப்பட்டி கோட்டாபட்டி, சின்லிங், வேலனூர், கே. வேட்ரப்பட்டி நரிப்பள்ளி ஆகிய பகுதிகளில் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் மின்தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.