தமிழகத்தில் இன்று (டிச.06) மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!!
கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் துணை மின் நிலையத்தில் இன்று (06.12.2021) மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மின் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. மேலும் மின்தடை ஏற்படும் பகுதிகளும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மின்தடை:
தமிழகத்தில் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் அணைத்து மாவட்டங்களிலும் தவறாது நடைபெற்று வருகிறது. துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகளின் போது மின் மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காக பராமரிப்பு பணிகள் முடிவு பெறும் வரை மின் தடை செய்யப்பட்டு வருகிறது. மின் தடை செய்யப்படுவது குறித்து முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு தெரிவித்து வருகின்றனர். பராமரிப்பு பணிகள் செய்யப்படுவதன் மூலம் முன் தொடர்பான குறைகள் நிவர்த்தி செய்யப்படுகிறது.
பாரதியை சாப்பிட வைக்கும் கண்ணம்மா, ஹேமாவை பார்க்க செல்லும் பாரதி – ‘பாரதி கண்ணம்மா’ இன்றைய எபிசோடு!
மின் நிலையங்களில் மின் இணைப்பு கம்பிகள் வயர்கள் மாற்றப்பட்டு பாதுகாப்பான மின் விநியோகம் உறுதி செய்யப்படுகிறது. தற்போது தமிழகம் முழுவதும் தொடர் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மின் கசிவு ஏதும் ஏற்படாமல் மின்கம்பங்களை சரி செய்ய மின்சாரத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து மின் ஊழியர்கள் மழையால் சேதமடைந்த மின் கம்பங்களை சரி செய்யும் பணிகளை மாவட்டம் தோறும் செய்து வருகின்றனர்.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளி விடுமுறை – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு! கனமழை எதிரொலி!
இந்த நிலையிலும் மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது மற்ற பகுதிகளை தொடர்ந்து இன்று கோயம்புத்தூர் மாவட்டம் சோமனூர் துணை மின் நிலையத்தில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் சோமனூர், கருமத்தம்பட்டி, கிருஷ்ணாபுரம், சாமளாபுரம், ராமாச்சி பாளையம், தொட்டிபாளையம், செந்தில் நகர், செகுடந்தாளி, பரமசிவம் பாளையம், கணியூர் எலச்சிபாளையம், ராயர் பாளையம், தண்ணீர் பந்தல், காளிபாளையம், அய்யம்பாளையம் ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.