கோவையில் நாளை (டிச.4) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
கோவை மாவட்டத்தில் உள்ள சூலுார் ,உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. தற்போது மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்து இப்பதிவில் காண்போம்.
மின்தடை:
தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மின் பராமரிப்பு பணிகளின் போது மின் ஊழியர்கள் பாதுகாப்பிற்காகவும், மின் நுகர்வோர் பாதுகாப்பிற்காகவும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் முடிவடையும் வரை மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. இது குறித்து அந்தந்த பகுதி மின் வரிய செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன் அறிவிப்பு செய்கின்றனர்.
HCL நிறுவனத்தில் IT நிபுணர்களுக்கான வேலைவாய்ப்பு – தகுதி, விண்ணப்பம் உள்ளிட்ட முக்கிய விவரங்கள்!
இதனை அறிந்து மின் பயனர்கள் மின் சார்ந்த பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிட்டு வருகின்றனர். மின் பராமரிப்பு பணிகளின் போது கம்பங்களில் வயர்கள் மாற்றுதல், மின் இணைப்புகளை புதுப்பித்தல், போன்ற பணிகள் நடைபெறுகிறது. மற்ற மாவட்டங்களை தொடர்ந்து கோவை மாவட்டத்தில் உள்ள சூலுார் ,உக்கடம் துணை மின் நிலையத்தில் நாளை மின் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் சூலுார், பி.எஸ்.நகர், டி.எம்.நகர், கண்ணம்பாளையம், ராமநாதபுரம், காங்கேயம்பாளையம், எம்.ஜி.புதுார், ராவத்தூர் ஆகிய பகுதிகள் ஆகும்.
மாநில அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு – முதல்வர் ஹாப்பி நியூஸ்!
மேலும் வெரைட்டி ஹால்ரோடு பகுதி, டவுன்ஹால் பகுதி, தியாகி குமரன் மார்க்கெட், ஒப்பணக்கார வீதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதிகள், கரும்புக்கடை, ஆத்துப்பாலம், உக்கடம், சுங்கம் பைபாஸ் ரோடு, சண்முகா நகர், ஆல்வின் நகர், இந்திரா நகர், பாரி நகர், டாக்டர் முனிசாமி நகர்,ஸ்டேட் பேங்க் ரோடு, ஆட்சியர் அலுவலகம் ஆகிய பகுதிகள் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.