தமிழகத்தில் நாளை (அக்.8) மின்தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
தமிழகத்தில் நாளை (அக்.8) கோவை விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெறவுள்ளதால் மின்தடை செய்யப்படும் பகுதிகள் குறித்த விவரங்கள் வெளியிடப்பட்டு உள்ளன.
மின்தடை அறிவிப்பு:
தமிழகம் முழுவதும் ஊரடங்கு காலத்தில் அனைத்து மாவட்டங்களிலும் எந்தவித முன்னறிவிப்பும் இன்றி மின்தடை செய்யப்பட்டது. இது குறித்து விளக்கமளித்த மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள், கடந்த 9 மாதங்களாக அதிமுக ஆட்சியில் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படவில்லை. அதனை தொடர்ந்து மின் சம்பந்தப்பட்ட புகார்களை கவனிக்க மின் புகார் மையங்கள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்படுகிறது.
தமிழகத்தில் 1 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு ஒத்திவைப்பு? அமைச்சர் நடத்தும் ஆலோசனை!
கடந்த மாதங்களில் நடைபெற்ற மின் பராமரிப்பு பணிகளுக்கு பிறகு மாதந்தோறும் தவறாது அனைத்து மாவட்டங்களிலும் உள்ள துணை மின் நிலையங்களிலும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. மற்ற பகுதிகளை தொடர்ந்து நாளை கோவை விளாங்குறிச்சி, காளப்பட்டி துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. எனவே மின் பராமரிப்பு ஊழியர்களின் நலன் கருதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது.
- தண்ணீர் பந்தல், லட்சுமி நகர், முருகன் நகர் (பீளமேடு ஹட்கோ காலனி), சேரன் மாநகர்
- குமுதம் நகர், ஜீவா நகர், செங்காளியப்பன் நகர், குருசாமி நகர்
- காளப்பட்டி, வீரியம்பாளையம், நேரு நகர், சிட்ரா, கைகோளபாளையம்
- பாலாஜி நகர், கே.ஆா்.பாளையம், விளாங்குறிச்சி, பீளமேடு தொழிற்பேட்டை, ஷாா்ப் நகர், மகேஸ்வரி நகர்
ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.