சென்னையில் ஜூலை 30 மின்தடை ஏற்படும் பகுதிகள்- மின்வாரியம் அறிவிப்பு!
சென்னையில் உள்ள சில பகுதிகளில் வழக்கமான மின்பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட இருப்பதால் குறிப்பிட்ட பகுதிகளில் நாளை (ஜூலை 30) மின்தடை செய்யப்படும் என மின்சார வாரியம் தகவல் அளித்துள்ளது.
மின்தடை பகுதிகள்:
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு வீடுகளிலும் மின்சார தடை ஏற்படக்கூடாது என்ற நோக்கில் மின்வாரியம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் மாவட்டந்தோறும் உள்ள அனைத்து பகுதிகளிலும் மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இப்பணிகள் ஒவ்வொரு நாளும் குறிப்பிட்ட பகுதிகளில் நடைபெறுவதால், அந்த பகுதிகளில் மட்டும் மின்தடை செய்யப்படுவது வழக்கம்.
தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு அறிவிப்பு எப்போது வெளியாகும்? அமைச்சர் விளக்கம்!
அதன்படி மின் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படும் நாட்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரையும், சில இடங்களில் காலை 10 மணி முதல் மதியம் 2 மணி வரையும் மின்தடை செய்யப்படுவது வழக்கம். அந்த வகையில் சென்னையில் நாளை (ஜூலை 30) வழக்கமான மின் பராமரிப்பு பணிகளுக்கான சில பகுதிகளில் மின்தடை செய்யப்பட உள்ளது.
TN Job “FB Group” Join Now
அதாவது சென்னையில் போரூர், நுங்கம்பாக்கம், மணலி, வேளச்சேரி, தாம்பரம் உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. அதனால் இப்பகுதிகளில் நாளை (ஜூலை 30) காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்படும் என மின்சார வாரியம் தகவல் அளித்துள்ளது.